Sunday, February 26, 2012

இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை, சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ), சரி நம்ம எப்படி சீன, தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும், பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் , 471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .


மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

Thursday, February 23, 2012

உறுதியில் உயர்ந்தவன்


கோடான கோடி
நவ மணிகளில்
வந்துதித்தது பார்
வல்வையில் ஒரு முத்து '

கார்த்திகை நன்னாளில்
காரிருள் கிழித்தே
காதிரவானாய் '

பார்போற்றும் பாவலரும்
பண்ணிசைத்து
பாவாலே தொழுதார்"

கொள்கைக்கு ஒரு வீரன்
நட்ப்புக்கு ஒரு நல்மகன்
உறுதியில் உயர்ந்தவன்'

வாரலாறுகள் வாழி காட்டிட
வரலாறுக்கே வழிகாட்டியாய்
இயற்கையை தத்துவாசிரியனாய்
இதயத்தில் நிலையாய் நிறுத்தி "!

செங்கோல் வளையாத
சீர் திருத்த வாதியும்
சிறுமை கொள்கை கொண்டோர்க்கு
பாயும் புலியாய் வாழும் வீரன்
அண்ணன் பிரபாகரன் .

தமிழ்

எந்தமிழ் செந்தமிழ்
புரியாதவருக்கும் பைந்தமிழ்
புரிந்தவருக்கு தேன்தமிழ்
அறியாதவருக்கு அழகுத் தமிழ்
அறிந்தவருக்கு அன்னைத் தமிழ்
பேசாதவருக்கு பெருந்தமிழ்
பேசுபவருக்கு தீந்தமிழ்
கல்லாதவருக்கு கன்னித் தமிழ்
வெல்வோர்க்கு வெற்றித் தமிழ்
நல்லோருக்கு நல்லதமிழ்
அறத்திநோருக்கு அறத் தமிழ்
வீரம் படைத்தோருக்கு வீரத் தமிழ்
அழிக்க நினைப்போரை அழிக்கும் தமிழ்
உலக பொதுமறை தந்த பொது தமிழ்
நல்லது சொன்ன நாலடி தமிழ்
இனியவை சொன்ன இனிய தமிழ்
இன்னாதது சொன்ன இன்பத் தமிழ்
பாரதம் சொன்ன பழந்தமிழ்
பகுத்தறிவுப் புகட்டும் பகுத்தறிவு தமிழ்
எங்கும் இருக்கும் பார்த் தமிழ்
பயில துடிக்கும் பச்சைத் தமிழ்
உணர்ச்சியைத் தூண்டும் உணர்ச்சித் தமிழ்
உண்ணத் துடிக்கும் அமுதம் தமிழ்
அரவணைப்பை வளர்க்கும் அன்புத் தமிழ்
அச்சம் என்பது அறியாத் தமிழ்
மரணத்தை மணக்கும் மகிமைத் தமிழ்
மன்னிப்புத் தரும் மல்லிகைத் தமிழ்
பண்பை வளர்க்கும் பண்புத் தமிழ்
பாசம் வளர்க்கும் பாசத் தமிழ்
நீதியைப் போற்றும் நீதித் தமிழ்
அமைதிக்காக அமைதித் தமிழ்
ஆயுதத்திற்கு ஆயுதத் தமிழ்
புரட்சி படைக்க புரட்சி தமிழ்
புதுமை படைக்கும் புதுமைத் தமிழ்
அறிவை வளர்க்கும் அறிவு தமிழ்
செழிப்பாய் இருக்கணும் செம்மைத் தமிழ்

Tuesday, February 14, 2012

உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !


ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூர் " !. சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? ஆம் ஒரு மன்னன் ஆட்சியில் இருக்கும் வேலையில் அவன் கொடுமைகள் செய்தாலும் நல்லது செய்தாலும் மக்கள் தாங்கிக்கொள்ளவேண்டும் என்ற கதையை மாற்றி, தனக்கு பிடித்த தலைவனை தானே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! .

கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!. பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது..

இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள்,பல்லவர்கள்,சம்புவர்யர்கள்,விஜய நகர அரசர்கள்,நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!. இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?...

Sunday, February 12, 2012

தென்காசி


தென்காசி பாண்டியர்

பாண்டியர் பெயர்க்காரணம்
பண்டு=பண்டைய=பாண்டிய=பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.

தென்காசி பாண்டியர்
பாண்டியர்களின் கடைசி தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தென்காசியையே தலைநகராக கொண்டனர். அவ்வூரின் பெரியகோயிலில் முடி சூட்டிக்கொண்டனர். அதற்கு முன் நெல்லை, மதுரை, மணலூர், கபாடபுரம் மற்றும் தென்மதுரை தலைநகர்களாயிருந்தன. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசி பாண்டியர் எனப்படுவர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தாறு, வள்ளியூர் போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும்.


தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.
எண் பெயர் காலம்
1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
2. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
3. அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
4. குலசேகர தேவன் கி.பி. 1479-1499
5. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
6. பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
7. நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
8. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
9. வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
10. வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
11. கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)

வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையில் இருந்தனர்.மேலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர். அதன் பிறகு யார்? யார்? பாண்டியர்கள் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழிந்து போனார்கள்.

வேறு பெயர்கள்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது.

சச்சிதானந்தபுரம்
முத்துத்தாண்டவநல்லூர்
ஆனந்தக்கூத்தனூர்
சைவமூதூர்
தென்புலியூர்
குயின்குடி
சித்தர்வாசம்
செண்பகப்பொழில்
சிவமணவூர்
சத்தமாதரூர்
சித்திரமூலத்தானம்
மயிலைக்குடி
பலாலிங்கப்பாடி
வசந்தக்குடி
கோசிகை
சித்தர்புரி

நகரமைப்பு

பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன.

மாசி வீதி : அவை முறையே தெற்கு மாசி வீதி, கீழ மாசி வீதி, வட மாசி வீதி, மேலமாசி வீதி எனப்படும். இதில் பிராமணர்களே பெரிதுமிருந்தனர்.
வேளாள வீதி : இவற்றில் வேளாண்மை செய்வோர் (பிள்ளை, செட்டி) இருந்தனர்.
கோனார்க்குடி : இவற்றில் பால் வியாபாரம் செய்வோர் (ஆயர்) இருந்தனர்.

பழங்குடிகள்
பலியர்
சங்கரன் கோயில் வட்டத்தில் வாசுதேவ நல்லூருக்கருகில் தலையணை என்னுமிடத்தில் வாழ்கின்றனர். குள்ள உருவமும் பரந்த தலை முடியையும் கொண்டவர்கள். தேனெடுத்தல், மான் வேட்டை இவர்களின் முக்கியத் தொழில்கள்.
பளிஞர்
பொதிகை மலையில் கலியாண தீர்த்தத்துக்கு 16 கி.மீ அப்பால் இவர்களின் குடியிருப்பு உள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. சொக்கி என்ற குழல் கருவியை வாசிக்கின்றனர். மலையாளத் தமிழில் தமிழ் பேசுவது இவர்கள் மரபு.
காணியர்
காணியர் பாபநாசம் கீழ் அணைக்கட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வேளாண்மைத் தொழில் செய்பவர்கள்.
படைத்தளம்
தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.

வாழ்வாதாரம்
நீராதாரம்:தெற்கு மாசி வீதி அடுத்து சிற்றாறு ஓடுகிறது. சிற்றாறே மூலிகைக்குற்றாலத்தின் மூலமாகும். மேலும் சீவலப்பேரி மற்றும் வன்னான் குளங்களிருந்தன.மேலும் பல அருவிகள் ஆதிவாசிகளுக்கு நீராதாரமாயிருந்தன.

நெற்களஞ்சியம்:
தென்காசி நெற்களஞ்சியம் அம்பாசமுத்திரமாகும்(அம்பை). அம்பை 16 என்னும் அரிசி ரகம் 5 வருடங்களுக்கு முன்வரை பரவலாக வழக்கத்திலிருந்தது.

கட்டிடக்கலை
திருக்குற்றாலநாதர் கோயில்
தென்காசி கோயில்
குலசேகரநாதர் கோயில்

முக்கியக்கோயில்கள்

1.தென்காசி கோயில் - மூலவர் காலம் தெரியவில்லை. கோயில் கோபுரங்களும் சன்னதிகளும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டது.
2. திருக்குற்றாலநாதர் கோயில் - மூலவர் காலம் தெரியவில்லை. கோயில் கோபுரங்களும் சன்னதிகளும் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டது.
3. குலசேகரநாதர் கோயில் - சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.

தென்காசி ஆலயச்சிறப்பு
வாயுவாசல் - இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம்.

இசைத்தூண்கள்
இக்கோயிலில் 16(2*8) இசைத்தூண்கள் பாலசுப்பிரமணிய ஆலய வாசலில் அமைந்துள்ளன. இந்த எட்டு தூண்களிலும் முறையே ச ரி க ம ப த நி ச சுவரங்கள் ஒலிக்கும். மேலும் சிறப்பென்னவென்றால் சுப்பிரமணியனின் இடத்தூண்கள் மென்சுவரங்களும் (பெண்), வலத்தூண்கள் வன்சுவரங்களும் (ஆண்) கொண்டவை.

ஒற்றைக் கல் சிலைகள்
மூலம்:தமிழ்வு
இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.

அக்னி வீரபத்திரர்
ரதிதேவி
மகா தாண்டவம்
ஊர்த்துவ தாண்டவம்
காளிதேவி
மகாவிஷ்ணு
மன்மதன்
வீரபத்திரர்
பாவை
பாவை
தர்மன்
பீமன்
அர்ச்சுனன்
நகுலன்
சகாதேவன்
கர்ணன்
மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.

சுரங்கப்பாதைகள்
தற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கிழக்கு நோக்கி செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாக தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

திருமலைப்புரம் ஓவியங்கள்
தென்காசி கடையநல்லூருக்கு அருகில் திருமலைப்புரம்(திருமலை கோவில்) உள்ளது.இங்குள்ள மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

ஐந்து யோக அடிப்படை பயிற்சி


எண்மூலசக்திநமதுடம்புஅதற்கான பயிற்சி
1.நிலம்தசைஉடற்பயிற்சி
2.நீர்குருதிகாயகல்பம்
3.நெருப்புஉடல் வெப்பம்சூர்ய வணக்கம்
4.காற்றுமூச்சுபிராணயாமம்
5.ஆகாயம்உயிர்குண்டலினி

Monday, February 6, 2012

இரத்தத்தானம்


முதன் முதலில் 1667 - ஆம் ஆண்டு டெனிஸ் என்ற மருத்துவர் 15 வயது சிறுவனுக்கு இரத்தத்தைச் செலுத்தினார். ஆனால், பின்னர் 18 - ஆம் நூற்றாண்டு வரை இரத்ததானம் செய்யப்படவில்லை. காரணம், இரத்தம் சிறிது நேரத்தில் உறைவதாகும். 1907 - ஆம் ஆண்டு கிரில்என்ற மருத்துவர் Operationமுறையில் இரத்தம் செலுத்தினார். பின்னர் ஆகோட்என்பவர் இரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் சேர்த்தால் உறையாது எனக் கண்டறிந்தார். இறுதியாக, 1923 -ஆம் ஆண்டு ஸ்டோரெர்’ ‘சோடியம் சிட்ரேட்சேர்க்காமல், பைப்ரினை நீக்கி இரத்தம் உறைதலைத் தடுக்கலாம் எனக் கண்டறிந்தார்.

இன்று, அறுவைசிகிச்சையின் போதும், விபத்துகளினால் ஏற்படும் அதிகபடியான இரத்தக் கசிவின் போதும் ஈடு செய்ய இரத்தம் செலுத்தப்படுகிறது.

&lsquoA’ இரத்த வகை மனிதனுக்கு, &lsquoB’ இரத்த வகையைத் தவறாக செலுத்தினால் &lsquoA’ இரத்தவகை மனிதனின் இரத்த செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இரத்தம் கட்டியாகி மரணம் ஏற்படும். இதற்கு அக்ளூடினேஷன்என்று பெயர்.

&lsquoO’ இரத்த வகையில் A,B ஆன்டிஜென்கள் இல்லை. அதனால்,எவ்வகை இரத்த குரூப்பைச் சார்ந்த உடலில் செலுத்தினாலும், இரத்தச் செல்கள் ஒட்டிக் கொள்வதில்லை. எனவே &lsquoO’ வகை இரத்தத்தை உடையோர் யுனிவெர்செல்டோனர் (Universal Donor) எனப்படுகின்றனர். இவர்கள் எந்தவகை இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் இரத்ததானம் செய்யலாம்.

&lsquoAB’ வகையில் ஆன்டிபாடிகள் கிடையாது. எனவே, அவர்கள் பெறும் இரத்தவகையிலுள்ள ஆன்டிஜென்களுடன் வினைபுரிவதில்லை என்பதால் அவர்கள் யுனிவெர்சல் ரெசிப்பியன்ட்ஸ்’ (Universal Receipients)எனப்படுகின்றனர். இவர்கள் எந்த வகை இரத்தம் உடையவர்களிடமிருந்தும் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

இரத்தத்தானம் செய்யக் கூடாதவர்கள்:

- &lsquoAIDS’ நோயாளிகள் (HIV)

- மரபியல் நோயாளிகள் (ஹீமோபிலியா, நிறகுருடு)

- கர்ப்பிணிப் பெண்கள்

- பாலூட்டும் தாய்மார்கள்

- பால்வினை நோயுடையவர்கள் (கொனீரியா, சிஃபினிஸ்)

பொதுவாக ஒருவர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இரத்ததானம் செய்யக்கூடாது. உடல் ஆரோக்கியம் உள்ளவரே தானம் செய்யலாம்!

சுரேந்திர நாத் பானர்ஜி


இந்திய சுதந்திர போராட்டத்திற்குக் காரணகர்த்தா யார் என்று நாம் தேடிக் கொண்டே சென்றால் ஒரு இடத்தில் நமது தேடுதல் நிலைத்து நிற்கிறது. 1848 -ல் வங்கத்தில் பிறந்தவர் சுரேந்திர நாத் பானர்ஜி என்ற மாமனிதன். சிறுவயதிலேயே சிம்மக் குரலில் உணர்ச்சியூட்டும் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். அமெரிக்க புரட்சிக் கொள்கையையும், மாசினி, கரிபால்டி போன்ற வீரர்களின் வரலாற்றையும் மக்களிடம் எடுத்துபேசி எழுச்சியூட்டினார்.

1871 - ல் இந்திய ஆட்சிப் பணித்துறைக்கான தேர்வில் வெற்றிப் பெற்றாலும், ஆங்கில அரசு பணியில் அமர்த்த மறுத்தது. தடைகளைக் கடந்து பதவி ஏற்றும் பயனில்லை. 1874 - ல் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இதனால், பானர்ஜி கல்கத்தாவில் இந்தியர் கழகத்தை நிறுவினார். இந்திய இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டுவதே அதனுடைய முக்கிய நோக்கம். இந்தியர்களை அரசு நிர்வாகத்தில் தடை செய்வதை எதிர்த்து மக்களைத் தட்டி எழுப்பினார். அதன் விளைவாக 1883 - ல் இந்திய தேசிய மாநாட்டைக் கூட்டினார். அந்த சமயத்தில் 1885 - ல் ஓய்வு பெற்ற ஆட்சிப் பணியாளரான ஆலன் ஆக்டேவியன் கியூம் இந்திய அரசின் அனுமதியுடன் இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டை கூட்டினார். இந்திய தேசிய மாநாட்டினரும் அதில் இணைந்தனர். பானர்ஜி 1895 - ல் காங்கிரஸ் தலைவரானார். 1921 முதல் 1923 வரை வங்க அரசின் அமைச்சராகவும் இருந்தார். வங்காளி என்ற பத்திரிகையை நடத்தினார். உருவாகின்ற ஒரு நாடுஎன்னும் நூலையும் எழுதினார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த முதல் நபர் இவரே. எனவேதான் இந்திய விடுதலை இயக்கத்தின் தந்தையாக பானர்ஜி போற்றப்படுகிறார். இவரது தந்தையாரே ஆரம்பத்தில் சுதந்திரம் குறித்த எண்ணங்களை இவருக்கு ஊட்டினார். அவர் மருத்துவராக பயிற்சி எடுத்து வந்தவர்.

லால் பகதூர் சாஸ்திரி


சாஸ்திரிஎன்றாலே லால் பகதூர் சாஸ்திரி என்று சொல்லி விடுகிறோம். சாஸ்திரி என்பது மெஞ்ஞான பாடத்தில் முதல் மாணவனாக பெற்ற பட்டமே சாஸ்திரி என்பது, அதுவே இன்று வரை லால்பகதூரின் புகழாய் நிலைத்து நிற்கிறது.

எளிய குடும்பத்தில் 1904 அக்டோபர் 2 - ஆம் நாள் மகாத்மா காந்தி அவதரித்த நாளில் பிறந்தார். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். தினசரி ஒன்பது கிலோ மீட்டர் காலையும் மாலையும் நடந்து சென்று கல்வி பயின்றார்.

1926 ல் தேசியத் தலைவரான லஜபதி ராய் துவக்கி, நடத்தி வந்த மக்கள் பணி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அச்சங்கத்தில் சேர ஒரு நிபந்தனை இருந்தது. பணியில் சேர்ந்தால் 20 ஆண்டுகள் பொதுப்பணி புரிய வேண்டும். தூய, எளிய வாழ்க்கை நடத்த வேண்டும். வாழ்க்கை செலவுக்கு மாதம் ரூ.60மட்டுமே வழங்கப்படும். லால்பகதூர் அதனை ஏற்று உறுப்பினரானார்.

1930 ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பேசி இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் காந்தியடிகள் நடத்திய எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைத்தண்டனையும்,வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் அனுபவித்தார். தனக்கென்று எந்த வேலையையும் தேடிக்கொள்ளாமல் மக்கள் பணிச்சங்கம் அளித்த 60 ரூபாயில் குடும்பத்தை நடத்தினார்.

1964 ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் நாளில் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 ஜனவரி 10 - ஆம் நாள் ரஷ்யாவின் தாஷ்கண்டில் நடைபெற்ற இந்திய பாக்கிஸ்தான் சமரச பேச்சின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தது வரை ஒன்றரை ஆண்டுகளே பிரதமராக இருந்தாலும் அவர் புகழ் ஓங்கி நிற்கிறது. அவரது எளிமை, நேர்மை, உண்மை, உழைப்பு, தியாகம் ஆகியவையே குன்றா புகழை தேடித்தந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றபோது 1947 - ல் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 1952 ல் ரயில்வே அமைச்சரானார். 1957 - ல் செய்தித்துறை,போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1961 - ல் உள்துறை அமைச்சராகவும் ஆனார். 1965 - ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாரதத்தின் பிரதமராக விளங்கிய லால் பகதூர் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி வெற்றிக் கண்டார். தன் வாழ்வு பற்றி கவலைப் படாது பாரதத்தின் நல் வாழ்வுக்காக உழைத்த அந்த உத்தமரை நினைவில் கொள்வோம்.