Saturday, August 17, 2013

அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ”

Ø தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்!

Ø  எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

Ø  கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

Ø  சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.

Ø  பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரேவிளையாட்டுதான்! ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

Ø  நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான், நெட் நண்பர்களிடம் இல்லை.

Ø  தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம்; ஆனால் பாட்டில்வாட்டர் தேடியதில்லை.

Ø  ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

Ø  அதிக அளவு இனிப்பு பண்டங்களையும், தட்டு நிறைய சாதம் சாப்பிட்டு வந்தபோதிலும் யாரும் ஓவர் குண்டாக இருந்ததில்லை.

Ø  காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

Ø  சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

Ø  உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே நாம் உடல் வலிமை பெற்றவர்கள்.

Ø  எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்!

Ø  எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஓடியவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே, பொருட்களை அல்ல.

Ø  அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட வேண்டிய அவசியமிருந்ததில்லை.

Ø  உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார், டாக்டரை தேடி ஓடியதில்லை!

Ø  எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை.

Ø  உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதிதெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.